உசிலம்பட்டி, மார்ச் 26: உசிலம்பட்டி அருகேயுள்ள போலியம்பட்டி கிராமத்தை சேர்ந்த நரையாண்டி மகன் சதீஷ்குமார் (27) இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டூவீலரில் தி.விலக்கருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் இறந்து போனார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 4 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், உள்ளது. நேற்று சதீஷ்குமார் உடல் மதுரையிலிருந்து ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது.