ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ உறுதி
பழநி, மார்ச் 25: திமுகவிற்கு போடும் ஓட்டு தமிழக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனக் கூறி பழநியில் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.பழநி தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் பழநி ஒன்றியம் சிவகிரிப்பட்டி, முல்லை நகர், தட்டான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக அமையும். எனக்கு வாக்களித்தால் பழநி நகரின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றி தரப்படும். அதுபோல் கொடைக்கானலிலும் இத்திட்டம் உடன் நிறைவேற்றப்படும்.