தூத்துக்குடி, மார்ச் 24: தூத்துக்குடியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி போல்டன்புரம், ராமசாமிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. நேற்றும் வழக்கம்போல் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு புதுக்கிராமம் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.