திருவாரூர், மார்ச் 24: திருவாரூர் மாவட்டமானது கடந்த 1996ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது உருவாக்கப்பட்டு இதற்காக கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் மாவட்ட தலைநகரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மத்திய பல்கலைக்கழகம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்பது மாவட்ட தலைநகரில் வசித்துவரும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.