வந்தவாசி, மார்ச் 24: வந்தவாசியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.48 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வந்தவாசி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ஹரிகுமார் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் பறக்கும் படையினர், நேற்று ஆரணி நெடுஞ்சாலை மும்முனி புறவழிச்சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செய்யாறில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற, லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் ₹91 ஆயிரம் ரொக்கம் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்றது தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.