ஈரோடு, மார்ச் 23:பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்துறை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று தனது அலுவலகத்திற்கு வந்த தோப்பு வெங்கடாச்சலத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது:பெருந்துறை தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சத்தை போக்குகிற வகையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் 75 சதவீதம் பணிகளை நிறைவு செய்து இருக்கிறேன். எனக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் 3 மாத காலத்திற்குள் மீதம் உள்ள பணிகளை முடித்து உங்களுடைய இல்லம் தேடி தண்ணீரை கொண்டு வந்து சேர்ப்பேன்.