மாமல்லபுரம், மார்ச் 23: மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களில் ஒன்றான கிருஷ்ணா மண்டபத்தில் சிற்பங்களை தொடாமல் கண்டு ரசிக்கும் வகையில் தொல்லியல் துறை மரத்திலான தடுப்பு வைத்துள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன், தபசு, கிருஷ்ணா மண்டபம், ஐந்து ரதம், கடற்கரை ஆகிய புராதன சின்னங்கள் பாராம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இவற்றை கண்டு ரசிக்க தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து கண்டு ரசித்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.