நாகர்கோவிலில் பெண் டாக்டர் வீட்டில் கொள்ளை முயற்சி

நாகர்கோவில், மார்ச் 22: நாகர்கோவில் பிரைட் தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ஷர்மிளா. இவர் நேற்று முன் தினம் பேயோடு பகுதியிலுள்ள தனது தாயார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று காலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் டாக்டர் ஷர்மிளாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஷர்மிளா வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே திருட்டு எதுவும் போகவில்லை. இது குறித்து நேசமணிநகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: