மன்னார்குடி, மார்ச். 21: மன்னார்குடி அருகே பைக் மீது லோடு வேன் நேருக்கு நேர் மோதிய விபத் தில் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்த தொழிலாளி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர்கள் ராஜ துரை (22), சதீஷ் (30). விவசாய கூலித்தொழிலாளியான இருவரும் நேற்று காலை வடசேரி பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு வேலை முடித்து மதியம் பைக்கில் ஊருக்கு திரும்பி வந்தனர். உள்ளிக்கோ ட்டை சத்திரம் பகுதி அருகே வந்த போது எதிரே திருவாரூர் மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த சதீஷ் (29) என்பவர் ஒட்டி வந்த லோடு வேன் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு தொழிலாளியான சதீஷ் படுகாயமடைந்தார்.