சாத்தான்குளம், மார்ச் 20:ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் எம்எல்ஏ நேற்று பேய்க்குளம் பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் எம்எல்ஏ நேற்று மாலை சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதிக்கு நேற்று வருகை தந்தார். முன்னதாக அவர் கட்டாரிமங்கலம் ஊராட்சித் தலைவர் கீதாகணேசன், ஆழ்வார்திருநகரி யூனியன் கவுன்சிலர் காந்திமதி ஆகியோர் சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் மீரான்குளம் ஊராட்சித் தலைவர் சிவபெருமாள், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவர் பெரியசாமி ஸ்ரீதர்,யூனியன் கவுன்சிலர் காந்திமதி , தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி தெற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.