சேலம், மார்ச் 20:சேலம் வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் தருண் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த வகையில் நேற்று ெநய்க்காரப்பட்டியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டாக்டர் தருண் கூறியதாவது:வீரபாண்டி ெதாகுதி க்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூட, ஆளுங்கட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சிதிலமடைந்த ரோடுகள், தேங்கிகிடக்கும் குப்ைபகள், விளைநிலங்களில் சாயக்கழிவு நீர், கழிப்பறை, மின்சாரம், குடிநீர் பற்றாக்குறை என்று பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.