பரமத்திவேலூர், மார்ச் 20: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் பரமத்திவேலூர் பகுதியில் ஊராட்சிகள் தோறும் நேரில் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் பொதுமக்களை வீடு வீடாக தேடிச்சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று ஜூம்மா தொழுகைக்கு பின்னர், பரமத்திவேலூர் சஹன்சா பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த முஸ்லிம்கள், கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ ஜமாத்தார்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பள்ளிவாசலில் ஜமாத்தார்கருடன் இணைந்து துவா செய்தார்.