குலசேகரம், மார்ச் 20: பத்மநாபபுரம் தொகுதியில் ஆரம்ப காலத்தில் நாம் தமிழர் கட்சியை கட்டமைத்தவர்கள் மற்றும் ஆற்றூர் பகுதியில் செயல்பட்டு வந்த நாம் தமிழர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஒன்றிணைந்து ஆற்றூர் சந்திப்பில் பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அதோடு தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உழைப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். இதில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் ஜாண்சிலின் சேவியர்ராஜ், இன்பராஜ், நன்மாறன், அரவிந்த், லாறன்ஸ், நாம் தமிழர் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் நடராஜன், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் ஐசக் உட்பட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.