ஒட்டன்சத்திரம் மக்கள் நலனுக்காக ஓயாது உழைத்தவர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம், மார்ச் 20: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி தலைமை வகிக்க, நகர செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், ‘ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி 24 மணிநேரமும் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து ஓயாமல் உழைத்து கொண்டிருக்கிறார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒட்டன்சத்திரம் நகர் சாலைகளை விரிவுபடுத்தி, மின்விளக்குகள் அமைத்து, அழகான நகராட்சியாக உருவாக்கியது, ஒட்டன்சத்திரத்திற்கு தனி தாலுகா அலுவலகம் கொண்டு வந்தது, இடையகோட்டை நங்காஞ்சியாறு தடுப்பணையை செயல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் அர.சக்கரபாணி. வரும் சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மையினரின் நலன் காக்கும் அரசாக திமுக அரசு என்றென்றும் செயல்படும். விவசாயிகளுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் திமுகதான்.  

நமது வேட்பாளர் அர.சக்கரபாணி மீது எதிர்க்கட்சி வேட்பாளர், குறைகளை சொல்ல சொல்ல அவருக்கு வாக்குகள் குறைந்து, டெபாசிட் காலியாகும். உங்களுக்காக உழைக்கும் சட்டமன்ற உறுப்பினைர அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்’ என்றார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளியப்பன், மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணை செயலாளர் ராசாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், சுப்பிரமணி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர்கள் பாண்யராஜன், ஆனந்தராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்ராஜ் நன்றி கூறினார்.

Related Stories: