வருசநாடு கிராமத்தில்
வருசநாடு, மார்ச் 19: வருசநாடு கிராமத்தில் மூலவைகை ஆற்றில் தடுப்பணை சேதமடைந்துள்ளதால், அதை சீரமைக்க விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு கிராமத்தில் செல்லும் மூலவைகை ஆற்றின் குறுக்கே சில ஆண்டுகளுக்கு முன் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. அதன்பின், வருசநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்துக்கு பயன்பட்டு வந்தது. இந்நிலையில், மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில், தடுப்பணை சிறிது, சிறிதாக சேதமடைய தொடங்கியது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தற்போது தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதுதவிர தடுப்பணையில் இருபுறமும் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களும் சேதமடைந்துள்ளன. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.