சென்னை, மார்ச் 19:ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 800 மெகாவாட் உற்பத்தி திறனுடன், இரு அனல் மின் நிலையங்கள் அமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் ஒப்புதல் கோரி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஒப்புதல் வழங்கி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அப்பகுதி மக்கள் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், அனல் மின்நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்ட, ஆயிரத்து 342 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்கள் எனவும், எந்த பொது விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு முறையாக நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் உப்பூர் அனல் மின்நிலையம் அமைக்க வழங்கிய ஒப்புதலை நிறுத்த வேண்டும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
- தெற்கு பிராந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம்
- மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
- உப்பூர் அனல் மின் நிலையம்