ஓட்டப்பிடாரம், மார்ச் 19: ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையா செக்காரக்குடி பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் புதியம்புத்தூரில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். செக்காரக்குடி, கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல், வர்த்தக ரெட்டிபட்டி, திம்மராஜபுரம், தளவாய்புரம் வாக்கு சேகரித்த அவர் அங்குள்ள திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பிரசாரத்தில் அவர் பேசுகையில், ‘‘தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் கூட்டுக்குடிநீர் கொண்டுவருவேன். சாலை வசதிகளை விரிவுபடுத்துவதோடு அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருவேன்’’ எந உறுதியளித்தார்.