மு.க.ஸ்டாலினை முதல்வராக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்: திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் பேட்டி

செங்கல்பட்டு, மார்ச் 19: செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் செங்கல்பட்டு ராட்டிண கிணறு அருகில் இருந்து காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில், திமுக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், மதிமுக, கூட்டணி கட்சிகளுடன் ஊர்வலமாக சென்றார்.பின்னர், செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில் வரலட்சுமி மதுசூதனன், தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷிடம் தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக வரலட்சுமி மதுசூதனனின் கணவரும் தொழிலதிபரும், திமுக பிரமுகருமான பி.மதுசூதனன் வேட்புமனு தாக்கல் செய்தார்.இதைதொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் அதிமுவின் ஊழல் ஆட்சியை ஒழித்துக்கட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். என்னை வெற்றிபெற செய்தால் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களையும் செங்கல்பட்டு தொகுதி மக்களுக்கு பெற்றுதருவேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல, 100 நாளில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பார். தமிழகத்தில் நல்லாட்சி கொடுப்பார். செங்கல்பட்டு தொகுதியில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றார்.அவருடன், திமுக நகர செயலாளர்கள் எஸ்.நரேந்திரன், ஜெ.சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.தண்டபாணி, ஆராமுதன், பேரூர் செயலாளர் ஜி.கே.லோகநாதன், ஒன்றிய நிர்வாகிககள் ஆப்பூர் சந்தானம், ஒ.ஈ.ஈஸ்வரி கே.பி.ராஜன், கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, தமிழரசன் இ.சங்கர், பார்த்திபன் முகமதுயூனுஸ், செல்லா உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: