மதுராந்தகம், மார்ச் 19: மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா, ‘10 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்’ என்று கூறினார்.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக கூட்டணியில், மதிமுக சார்பில் மல்லை சத்யா போட்டியிடுகிறார். காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில், எம்பி செல்வம், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி ஆகியோருடன் வேட்பாளர் மல்லை சத்யா ஊர்வலமாக சென்று மதுராந்தகம் நகர திமுக அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து ஆர்டிஓ அலுவலகம் சென்று, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ லட்சுமி பிரியாவிடம், வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.அவருடன், செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, காஞ்சிபுரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, காஞ்சி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சூ.க.ஆதவன், மதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் ஊனை பார்த்திபன், திமுக நகர செயலாளர் கே.குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதரன், சத்யசாய், கண்ணன், தம்பு, பேரூர் செயலாளர்கள் விஜயகணபதி, உசேன், மதிமுக மாவட்ட பொருளாளர் சங்கரன், நகர செயலாளர் ராஜி, ஒன்றிய செயலாளர்கள் கோட்டையன், கோபி, இளவரசு, ராஜா, பேரூர் செயலாளர்கள் சரத், முஜிபர் ரகுமான் உள்பட பலர் இருந்தனர்.