முத்துப்பேட்டை, மார்ச் 18: முத்துப்பேட்டையில் சாலை பணியை நிறுத்திய பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பக்கிரிவாடி தெரு, காசிம் தோட்டம் சாலை பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூராட்சி சார்பில் முறையான சாலை, குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்டை வசதிகள் ஏதும் இதுநாள் வரை பேரூராட்சி சார்பில் செய்து கொடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மழை காலங்களில் சாலைகளில் செல்ல முடியாதளவிற்கு சேரும் சகதியுமாக காட்சி அளிப்பதுடன், அவசரத்திற்கு வாகனங்கள், ஆபத்தான நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாபடி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக இப்பகுதிக்கு புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வேறு பகுதியில் உள்ள ஒரு சாலைக்கும், இந்த பக்கிரிவாடி காசிம் தோட்டம் இணைப்பு சாலைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த வாரம் பணிகள் துவங்கியது.