வேலூர், மார்ச் 18: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப்பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டிஐஜி காமினி தலைமையில் நேற்று நடந்தது. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களின்போது பாதுகாப்புப்பணியில் முன்னாள் படைவீரர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன்படி, ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்துக்க டிஐஜி காமினி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் எஸ்பிக்கள் வேலூர் செல்வகுமார், ராணிப்பேட்டை சிவக்குமார், திருப்பத்தூர் விஜயகுமார், திருவண்ணாமலை அரவிந்த் மற்றும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.