மதுரை, மார்ச் 18: மதுரை மத்திய சிறையிலிருந்து அவசர கால விடுமுறையில் சென்ற கைதி மாயமானதால், போலீசார் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர். மதுரை பீ.பீ.குளம் மருதுபாண்டியர் நகர், முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் ஒரு வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில், அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கைதிகள் அவசர கால விடுமுறை சட்ட விதியின் கீழ், பால்பாண்டி கடந்த மார்ச் 15ம் தேதி விடுமுறை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதிகாரிகள் பரிசீலனை செய்து, அவருக்கு விடுமுறை அளித்தனர். ஆனால், அவர் விடுமுறை முடிந்த பின்னர் சிறைக்கு திரும்பி வரவில்லை.