ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2வது நாளாக நேற்றும் வங்கி ஸ்டிரைக் காரணமாக ₹500 கோடி பணபரிவர்த்தனை முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் பொதுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 2 வங்கிகள், ஒரு இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றை மத்திய அரசு தற்போது தனியாரிடம் வழங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சில வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொதுத்துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினமும், நேற்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.