திருவில்லிபுத்தூர், மார்ச் 17: திருவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவில்லிபுத்தூர் மம்சாபுரம் செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே திருவில்லிபுத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் மற்றும் சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையை மேற்கொண்டிருந்தனர். அப்போது மம்சாபுரத்தில் இருந்து திருவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிக்கனி என்பவர் வங்கியில் செலுத்துவதற்காக ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்தார். தனியார் பள்ளி அருகே பறக்கும் படையினர் அவரை சோதனை செய்தபோது பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.