முதல் நாளில் 20 பேர் 33 மனு தாக்கல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 20 வேட்பாளர்கள் 33 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் சந்திரசேகர், கனிமொழி, சக்திவேல், ரங்கம் தொகுதியில் கு.பா.கிருஷ்ணன் (3 மனுக்கள்), திருச்சி மேற்கு தொகுதியில் பத்மநாதன் (4), வினோத், திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் (3), மனோகரன், சேக் அப்துல்லா, திருவெறும்பூரில் குமார் (2), சக்திவேல், லால்குடியில் மலர் தமிழ் பிரபா, மண்ணச்சநல்லூரில் பரஞ்ஜோதி (3), ஜெயகுமார், கிருஷ்ணசாமி, முசிறியில் தேவி, துறையூர் (தனி) தொகுதியில் இந்திராகாந்தி (4), பாலசுப்பிரமணியன், ஸ்டாலின்குமார், பூபதி என 20 வேட்பாளர்கள் 33 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: