ராசிபுரம், மார்ச் 16: நாமகிரிபேட்டை ஒன்றியம், மங்களபுரம் ஊராட்சி அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவருமான கேஆர்.சுந்தரம், முன்னாள் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவரும், பாமக முன்னாள் ஒன்றிய அவைத்தலைவருமான கருமலை, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜானகிராமன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சுப்ரமணி, கேசவன், பசுபதி, சத்தியகாந்தி, சிவா, விக்னேஷ், குகன், சிவா, மாணிக்கம் மற்றும் அருள் ஆகியோர், அக்கட்சியில் இருந்து விலகி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், ஒன்றிய செயலாளர் ராமசுவாமி ஆகியோர் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.