கும்மிடிப்பூண்டி, மார்ச் 16: தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 2835 ஊழியர்களுக்கு கும்மிடிப்பூண்டியில் 2 பள்ளிகளில் தேர்தல் குறித்த முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் பயிற்சிக்கு வந்த அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது. கும்மிடிப்பூண்டி மற்றும் எல்லாபுரம் ஆகிய இரண்டு ஒன்றியங்களை சேர்ந்த 2835 ஊழியர்களுக்கு கும்மிடிப்பூண்டி தனியார் பள்ளி, சிந்தலக்குப்பம் தனியார் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
தேர்தல் அன்று வாக்கு சாவடிகளில் பணிபுரிய உள்ள கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த 1597 பேருக்கும், எல்லாபுரத்தை சேர்ந்த 1238, என 2835 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் தேர்தல் குறித்த சிறப்பு பயிற்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆட்சியர் பாலகுரு தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ஏ.என்.குமார், கும்மிடிப்பூண்டி தேர்தல் பணி துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அனைத்து ஊழியர்களுக்கும் வாக்குசாவடிகள் செய்ய வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்ய வேண்டிய பணிகள் எடுத்துரைக்கப்பட்டதோடு, அவர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டது.