திருச்சுழி வந்தவரை வரவேற்க ஆளில்லை அதிமுக கூட்டணி வேட்பாளர் அப்செட்

திருச்சுழி, மார்ச் 15: திருச்சுழிக்கு வந்த அதிமுக கூட்டணி வேட்பாளரை வரவேற்க குறைந்த அளவே தொண்டர்கள் வந்ததால், அவர் அப்செட் ஆனார். தமிழகத்தில் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி திமுக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில், திருச்சுழி தொகுதி அதிமுக கூட்டணியான அகில இந்திய  மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், விருப்பமனு தாக்கல் செய்த அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். இந்நிலையில், அதிமுக கூட்டணி அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக வேட்பாளரான ராஜசேகர் நேற்று திருச்சுழி பூமிநாதர் கோவிலுக்கு வணங்கி விட்டு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வந்தார். அவரை வரவேற்க அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் குறைந்தளவே வந்திருந்தனர். இதனால், கூட்டணி வேட்பாளர் ராஜசேகர் அதிருப்தி அடைந்தார்.

Related Stories: