உத்தமபாளையம், மார்ச் 15: உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி கல்லூரி தாளாளர் தர்வேஷ் மைதீன் தலைமை தாங்கினார். கல்லூரி ஆட்சி குழு தலைவர் செந்தல் மீரான் முன்னிலை வகித்தார். பேரணியை முதல்வர் டாக்டர் முகமது மீரான் தொடங்கி வைத்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை பொதுமக்கள் நிறைவு செய்ய வேண்டும். பணமில்லாமல் ஓட்டளித்து, ஜனநாயகத்துக்கு உதவி செய்வது மற்றும் வாக்களிப்பில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தேர்தல் துணை தாசில்தார் சுருளி, தேசிய பாதுகாப்பு படை அலுவலர் பேராசிரியர் அப்துல்காதர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.