நாகை, மார்ச் 14: நாகை மாவட்டம் நாகூர் அருகே சம்பா தோட்டம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் நாகை சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும் சின்னத்தில் போட்டியிடுகிறது.