ஆரணி, மார்ச் 14: ஆரணி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்த நெசவு தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சிறுமியின் பெற்றோர், சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, நெசல்புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளி லோகநாதன்(40) என்பவர் அங்கு வந்தார். பின்னர், வீட்டின் வெளியே இருந்த சிறுமியிடம் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். அதன்பேரில், சிறுமி தண்ணீர் கொண்டுவர வீட்டிற்குள் சென்றபோது, அங்கு யாரும் இல்லாததை அறிந்த ேலாகநாதன் அவரை பின்தொடர்ந்து சென்றார்.