தேமுதிக நிர்வாகி கார் தீ வைத்து எரிப்பு

கோவை, மார்ச் 13: கோவை குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சின்னசேட் (40). கட்டிட தொழிலாளி. இவர் குறிச்சி பகுதி தேமுதிக அவைத்தலைவராகவும் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தி இருந்தார். இரவு 11.30 மணியளவில் அவரது கார் தீப்பிடித்து எரிந்தது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சின்னசேட்டிடம் தெரிவித்தனர். அவர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி காரில் எரிந்த தீயை அணைத்தார்.

இருப்பினும் காரின் பின்பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். மர்ம நபர்கள் யாரேனும் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: