திருப்புத்தூர், மார்ச் 9: திருப்புத்தூர் அருகே மணமேல்பட்டி விலக்கு பகுதியில் நேற்று உரிய ஆதாரம் இல்லாததால் எடுத்துச் செல்லப்பட்ட மூன்று மூட்டை ரேஷன் அரிசிகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்புத்தூர்- குன்றக்குடி சாலையில் மணமேல்பட்டி விலக்கு பகுதியில் நேற்று பறக்கும் படை தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.