ரயில்வே ஸ்டேஷனில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

 

ஈரோடு, ஜூன் 18: ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்கள் அதிகளவில் ரயில்கள் மூலமாக கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதனை தடுக்க ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரும், ரயில்வே போலீசாரும் ரயில்வே ஸ்டேஷனில் இணைந்து தீவிர ரோந்து மேற்கொண்டனர். இதில், ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் 2வது பிளாட்பார்மில் ரோந்து சென்றபோது, பொது கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பொட்டலத்தை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில், 2 கிலோ கஞ்சா மற்றும் 200 கிராம் கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: