கேடிசி நகர், மார்ச் 8: தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் மத்திய சபை மன்றத்திற்கு புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் வரும் 13ம் தேதி பாளையில் நடக்கிறது. இதையடுத்து இத்தேர்தலில் முன்னாள் ‘லே’ செயலாளர் வேதநாயகம் அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் பாளை பெருமாள்புரத்தில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்குத் தலைமை வகித்த முன்னாள் ‘லே’ செயலாளரும், தற்போதைய ‘லே’ செயலாளர் வேட்பாளருமான வேதநாயகம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாழ்த்திப் பேசினார்.