நெல்லை திருமண்டல மத்திய சபை மன்ற நிர்வாகக்குழு தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் முன்னாள் ‘லே’ செயலர் வேதநாயகம் பங்கேற்பு

கேடிசி நகர், மார்ச் 8:   தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் மத்திய சபை  மன்றத்திற்கு புதிய  நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் வரும் 13ம் தேதி பாளையில் நடக்கிறது. இதையடுத்து இத்தேர்தலில் முன்னாள் ‘லே’ செயலாளர் வேதநாயகம் அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் பாளை பெருமாள்புரத்தில் நேற்று இரவு நடந்தது.  கூட்டத்திற்குத் தலைமை வகித்த முன்னாள் ‘லே’ செயலாளரும், தற்போதைய ‘லே’ செயலாளர் வேட்பாளருமான வேதநாயகம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாழ்த்திப் பேசினார்.

வேட்பாளர்கள் மணக்காடு ஜீவக்குமார், என்ஜிஓ காலனி சாம்சன் பால்ராஜ், பெருமாள்புரம் எட்வின் லாரன்ஸ், மிலிட்டரி லைன் புஷ்பா பொன்மணி, ஆரைகுளம் தனசேகரன் குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கதீட்ரல் பேராலய சேகர குரு பீட்டர் தேவதாஸ், மிலிட்டரி லைன் சேகரத் தலைவர் பில்லி,  குருவானவர்கள் டேவிட் அன்பு பிரபாகர், ஜான் செல்வின், விஜய்சிங், ஜெபரத்தினம், ஆரூன் ஜெபத்துரை, முத்துராஜ் மற்றும் தேவதாஸ், ஞானராஜ், பொன்னு, வக்கீல் ஜெனி, கரையிருப்பு ஜெயராஜ் என வேதநாயகம் அணியினர்  ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: