ஒட்டன்சத்திரத்தில் ரூ.81 ஆயிரம் பறிமுதல்

ஒட்டன்சத்திரம், மார்ச் 8: ஒட்டன்சத்திரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.81 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் கூட்டுறவு தணிக்கை துறை ரமேஸ்குமாரின் சிறப்பு பறக்கும் படையினர், உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையில் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது திண்டுக்கல்லைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் அழகேசன் (46), ஓட்டி வந்த காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.81 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சசியிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, மேல்முறையீடு செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.

Related Stories: