கொல்கத்தா: மேற்குவங்க தொடக்கப்பள்ளி ஆட்சேர்ப்பு முறைகேடுகள் வழக்கு தொடர்பாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் முதல்வர் மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி ஜூன் 15 அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு ஒன்று நேற்று மாலையில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள காளிகாட் சாலையில் அமைந்துள்ள அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்குச் சென்று, அவர் அங்கு இல்லாததால் அவரது பணியாளர் ஒருவரிடம் சம்மனை வழங்கியதாக அவர்கள் கூறினர்.
