வேதாரண்யம், மார்ச் 5: வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் டாக்டர்களின் பரிந்துரை கடிதத்துடன் நகராட்சி எல்லைக்குள் (10 கி.மீ) ரூ.1000 ,தாலுகா அளவில் ரூ.1800, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் உள்ள திருத்துறைப்பூண்டிக்கு ரூ.1800, திருவாரூருக்கு ரூ.3000, தஞ்சாவூருக்கு ரூ.3,600யை கட்டணமாக செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம்.