மதுரை, மார்ச் 5: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வரும் 9ம் தேதி மாநகர் வடக்கு, ெதற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரை மூன்றுமாவடி சிஎஸ்ஐ மைதானத்தில் நடக்கிறது. இதுகுறித்த மாநகர் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், “9ம் தேதி நடைபெறும் உங்கள் ெதாகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறுகிறார்.