மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக மக்கள் சாலை மறியல்

 

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் திடீரென மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சில நாட்களாகவே குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார். பேருந்துகள் இல்லாமல் நீண்ட நேரம் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Related Stories: