அறந்தாங்கி, மே 26: தமிழ்நாடு முழுவதும் தற்போது அதிகளவில் பேசப்படும் ஒரு முக்கிய விசயங்களில் ஒன்றாக உள்ளது ‘உழவர் அட்டை’ (Farmer ID). பலர் இதை சாதாரண அடையாள அட்டை என நினைத்து புறக்கணிக்கிறார்கள். ஆனால் வேளாண் துறையினரின் பார்வையில் இது வெறும் அட்டையல்ல, எதிர்காலத்தில் அரசு மானியங்கள், நிவாரணங்கள், காப்பீடு, நிதி உதவிகள் அனைத்தையும் பெறுவதற்கான ‘மாஸ்டர் கீ’ என்பதாக உள்ளது.
ஒரு காலத்தில் விவசாயம் செய்ய நிலம் இருந்தால் போதும். அரசு அலுவலகத்தில் பெயர் இருந்தால் போதும். ஆனால் இன்று அரசு திட்டங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், ‘பதிவு செய்யப்பட்ட விவசாயி’ என்ற அடையாளம் முக்கியமாகியுள்ளது.
