போடி, மார்ச் 4: போடி அருகே அணைக்கரைப்பட்டி, துரைராஜ்புரம் காலனி, மீனாட்சிபுரம், தீர்த்தத்தொட்டி, தோப்புப்பட்டி, கோடங்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் மழை, கிணற்று நீர் மற்றும் கொட்டகுடி ஆற்று பாசனத்தின் வாயிலாக ஆலை கரும்பு விவசாயம் செய்தனர். தற்போது கரும்பு நன்கு விளைந்த நிலையில் அறுவடை பணியில் ஆங்காங்கே தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கரும்புகளை வெட்டி விற்பனைக்கு அனுப்ப கட்டுகளாக கட்டி வருகின்றனர். மேலும் அணைக்கரைப்பட்டி பகுதியில் வெல்லப்பாகு காய்ச்சும் பணியும் நடக்கிறது.