சிவகங்கை, மார்ச் 4: சட்டமன்ற தேர்தலையொட்டி ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் பணம் டிரான்ஸ்பர் செய்வது கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி வங்கி பணப்பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. தேசிய வங்கிகளில் ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்ததனை செய்வது, ரூ.10லட்சத்திற்கு மேல் எடுப்பது அல்லது பணம் செலுத்துவது, ஒரு வங்கி கணக்கில் இருந்து பலருக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்வது, வங்கி கணக்கு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில் திடீரென தற்போது அந்தக்கணக்கில் இருந்து அதிகப்படியாக பணப்பரிவர்த்தனை நடப்பது உள்ளிட்டவைகள் கண்காணிப்பு செய்யப்பட உள்ளது.