திருப்பரங்குன்றம், மார்ச் 4: திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவினரின் சுவர் விளம்பரங்கள் பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி மாநகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் குறிப்பாக அரசு சுவர் மற்றும் பொது இடங்களில் அதிமுகவினரின் கொடிகள், பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.