புதுகை மாவட்ட அஞ்சலகத்தில் நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் சேர்க்கை: நாளை, நாளைமறுநாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

 

புதுக்கோட்டை, மே 25: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகரவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வணிகம் செய்வதற்காக நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்களாக செயல்பட விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவோர், செய்யும் வணிகத்துக்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்கள், அதிகபட்ச வயது வரம்பு இல்லை. கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. நேரடி முகவர் பணிக்கு வேலை இல்லாதோர், சுய தொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

Related Stories: