இஸ்லாமாபாத்: அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இருநாடுகளுக்கு இடையே முதலில் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடந்தது. அதனால் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. தற்போது மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் பாகிஸ்தான் தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் நேற்று திடீரென ஈரான் புறப்பட்டு சென்றார். அவர் தனது ஈரான் பயணத்தின் போது போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய ஈரானிய பிரமுகர்களைச் சந்திக்க உள்ளார்.
