ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தைஷோயின்’ என்ற பௌத்த கோயிலின் ஒரு பகுதி நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. இந்த கோயிலில் கடந்த 1200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்து வந்த அணையாத புனித ஜோதியே இந்த தீ விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
