சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.கடந்த10ம் தேதிமுதல் 16ம் தேதி வரையிலான வாரத்தில் மட்டும் 12,700 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,000ஆக இருந்தது என்று தொற்றுநோய் தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது. அந்த காலக்கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும் 56ல் இருந்து 73 ஆக அதிகரித்தது.
