திருச்சி, மே20: தமிழ்நாடு 2வது பட்டாலியன் சார்பில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி முகாம் ஜோசப் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு 2வது பட்டாலியன் சார்பில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் பயிற்சி முகாம் நடத்துவது வழக்கம். இதனையடுத்து கடந்த மே11 ம் தேதி தொடங்கி தற்போது வரை புனித ஜோசப் கல்லூரியில் முகாம் நடைபெற்று வருகிறது.
