திருச்சி, மே 15: திருச்சியில் குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி எடமலைபட்டிப்புதூர் எஸ்பிஐ காலனி அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று குட்கா விற்ற எ.புதூர் சீனிவாச நகரை சேர்ந்த அப்துல்லா(26), என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 80 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
